×

அரியலூரில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 377 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரியலூர், டிச. 25:  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  தனசேகரன்   தலைமையில்   நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 377 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வருவாய் அலுவலர் தனசேகரன் அறிவுறுத்தினார்.பின்னர் வரிசையில் காத்திருக்காமல் தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...