ஓய்வு அரசு ஊழியர் கார் மோதி பலி

திருச்சி, டிச. 19:   திருச்சி உறையூர் வைக்கோல்கார தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (62), ஓய்வு அரசு ஊழியர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கில் கே.கே.நகரில் இருந்து காஜாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமதாஸ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்் பலனின்றி நேற்று முன்தினம் ராமதாஸ் இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: