திருச்சி, டிச.19: திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உலமாக்கள் மற்றும் இதரபணியாளர்கள் நல வாரிய அட்டைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் மற்றும் ஓய்வூதியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள் (ம) இதர பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன் மூலம் பள்ளிவாசல், தர்காக்கள், மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இவ்வாரியத்தால் உறுப்பினராக பதிவு செய்து, உலமா அடையாள அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் தங்கள் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.