மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

மணப்பாறை, டிச.19:  மணப்பாறை ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மணப்பாறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கு.பெரியபட்டி ஊராட்சி வடக்கு சேர்பட்டி, தெற்கு சேர்பட்டியில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, அந்த பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தவது, அத்துடன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்படும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி வடக்கு சேர்பட்டி பாண்டியன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: