கஞ்சா வியாபாரிக்கு 3 மாதம் சிறை புதுகை நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி, டிச.19:  திருச்சியை சேர்ந்த கஞ்சா வியாபாரிக்கு புதுகை நீதிமன்றம் 85 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. திருச்சி தில்லைநகர் அண்டகுண்டான் நீர்தேக்க தொட்டி அருகில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (எ) சம்சா காமராஜ் என்பவரை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 23ம் தேதி குற்றப்பத்திரிகை இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து புதுக்கோட்டை உணவு பொருள் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றவாளியான சம்சா காமராஜிக்கு 85 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Related Stories: