கல்லறை தோட்ட அலுவலகத்தில் உண்டியலை உடைத்து பணம்

திருட்டுதிருச்சி, டிச.19: திருச்சி அடுத்த அல்லித்துறை பெரிய நாயகி நகரை சேர்ந்தவர் வில்லியம்ஸ் (62). இவர் பாலக்கரை வேர்ஹவுஸ் ஆர்.சி.எம்.சி. கல்லறையில் மேலாளராக பணியில் உள்ளார். சம்பவத்தன்று கல்லறை கேட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் பார்த்த போது கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.  உள்ளே சென்று பார்த்த போது கல்லறை உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த ரூ.3ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: