பைக்கிலிருந்து விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

தா.பேட்டை, டிச.19:  முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் (70).  இதே ஊரைச் சேர்ந்த உறவினர் சுகுமார் (32) என்பவருடன் பைக்கில் முசிறிக்கு  வந்துவிட்டு மீண்டும் திருஈங்கோய்மலை சென்றுள்ளனர். முசிறி அருகே  சந்தபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட  முயன்றபோது இருவரும் பைக்கில் இருந்து விழுந்தனர். அதே நேரத்தில் அவ்வழியாக வந்த  லாரி  சிதம்பரத்தின் தலைமீது ஏறியது. இதில் அவர் தலைநசுங்கி இறந்தார். இச்சம்பவம் குறித்து முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர்.

Related Stories: