சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தில் வாடகைக்கு விவசாய கருவி

திருச்சி, டிச.19:  சிறுகமணி வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் பல்வேறு பண்ணை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் பல்வேறு பண்ணை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தலாம்.  நன்செய் கலப்பை, புன்செய் கலப்பை, கொத்து கலப்பை, விதை விதைக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, வரப்பு போடும் கருவி உள்ளிட்ட பல்வேறு கருவிகள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 0431-2614417, 2614457 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை சிறுகமணி வேளாண் அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: