தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அதிகாரி ஆய்வு

பாபநாசம்,டிச. 19: பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை அலுவலகத்தை தமிழ்நாடு நேவல் கமாண்டர் தினகரன் ஆய்வு செய்தார்.அப்போது அலுவலத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்து மாணவர்கள் முப்படைகளில் சேருவதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். ஆய்வின்போது பள்ளி தலைமையாசிரியர் மணியரசன், உதவி தலைமையாசிரியர் ரமேஷ், தேசிய மாணவர் படை அலுவலர் செல்வகுமார், முதுகலை ஆசிரியர் ரமேஷ் உடனிருந்தனர்.

Related Stories: