பட்டுக்கோட்டையில் மண்சட்டி ஏந்தி தமாகா ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை, டிச. 19: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அறந்தாங்கிரோடு முக்கம் காந்தி சிலை அருகில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை தெற்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரங்கராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் நடராஜன், பட்டுக்கோட்டை நகர தலைவர் குமார், தஞ்சை மாநகர தலைவர் ராஜவேல் முன்னிலை ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உட்பட 600 பேர் பங்கேற்றனர். முன்னதாக நகர தலைவர் குமார் வரவேற்றார். வட்டார தலைவர் வைத்திலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories: