மாநில குத்துச்சண்டை போட்டி: குடந்தை மாணவிகள் சாதனை

கும்பகோணம், டிச. 19: திருப்பூரில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கும்பகோணம் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். திருப்பூரில் குடியரசு தின விழாவையொட்டி மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி கடந்த வாரம் நடந்தது. போட்டியில் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் வளனார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மீனா வெள்ளிப்பதக்கமும், 12ம் வகுப்பு படிக்கும் மாணவி புவனேஸ்வரி வெண்கல பதக்கம் வென்றனர். மேலும் போட்டியில் பங்கேற்ற 7 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவிகளை தலைமையாசிரியை ஜாக்குலின்மேரி பாராட்டினர்.

Related Stories: