மின் விநியோகம் வழங்ககோரி வடசேரியில் மக்கள் மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஒரத்தநாடு, டிச. 19: மின்விநியோகம் வழங்ககோரி வடசேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கஜா புயலின் கோரதாண்டவத்தால் ஒரத்தநாடு பகுதியில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் ஒரத்தநாடு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. புயல் கரையை கடந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் மின் விநியோகம் செய்யாததை கண்டித்து ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த வடசேரி கிராம பொதுமக்கள் சாலை மறிலியல் ஈடுபட்டனர். பாப்பாநாடு போலீசார் மற்றும் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் மன்னார்குடி- பட்டுகோட்டை நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்காததால் ஒக்கநாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Related Stories: