பொறுப்பாளர்களுக்கு சீருடை வழங்கல்

காலாப்பட்டு, டிச. 18:  விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார்சாவடி, நடுக்குப்பம், தந்திராயன் குப்பம், சோதனை குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களின் பேரிடர் மேலாண்மை முதுநிலை பொறுப்பாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் கலந்து கொண்டு, ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த தலா 10 பேரிடர் மேலாண்மை முதுநிலை பொறுப்பாளர்களுக்கு சீருடை வழங்கினார்.  அதைத் தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விழுப்புரம் மாவட்ட கோட்டாட்சியர் குமரவேல், வானூர் தாசில்தார் ஜோதிவேல், பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் வாசுதேவன் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Related Stories: