புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரி கடற்கரை சாலையில் தனியார் செல்போன் நிறுவனம் வை-பை டவர் அமைப்பதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இதனை எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் 25க்கும் மேற்பட்ட வை-பை டவர்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கியுள்ளது. இது புதுச்சேரியின் அழகை கெடுப்பதோடு, கடற்கரை மேலாண்மை சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்று அதிகப்படியான செல்போன் கோபுரங்களால் வெளியிடப்படும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும்.