திருச்சி, டிச.18: தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகி கைது கண்டித்து திருச்சியில் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணனை சென்னை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சியில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.