பதவி உயர்வில் முறைகேடு : கொடைக்கானலில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல், டிச. 16:  பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து கொடைக்கானலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கொடைக்கானல் மலைப்பகுதியில் பள்ளத்தடி ஊராட்சி ஒன்றிய பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜே.எஸ்ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கொடைக்கானல் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வட்டார தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார். நகர தலைவர் ரமேஷ், மாவட்ட தலைவர் வாட்சன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் குன்வர் சோசுவா வளன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்தும், தீபாவளி முன்பணம், அகவிலைப்படி, நலநிதி முன்பணம் உள்ளிட்டவைகளை வழங்க கோரியும் கோஷமிட்டனர்.

இதில் 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: