குடந்தை அருகே பதுக்கல் சாராயம் பறிமுதல்

கும்பகோணம், டிச.16:  கும்பகோணம் அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.  கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் பகுதியில் சாராயம் விற்பனை செய்து வருவதாக  தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செட்டிமண்டபம், வடக்குத்தெருவில்  அண்ணாதுரை(40) என்பவரது வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்தபோது, சுமார் 10 லிட்டர் அளவு கொண்ட கேனில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து அண்ணாதுரையை கைது செய்தனர்.

Related Stories: