தஞ்சை, டிச.16: தஞ்சை மாவட்டத்தில் போலீசார் 3 நாட்கள் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 6,650 மது பாட்டில்கள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்ற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின்படி, கடந்த 13ம் தேதி முதல் நேற்று வரை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில், மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இச்சோதனையின்போது, சுமார் 6,650 மதுபான பாட்டில்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.