கஞ்சா கடத்தல்: புல்லட் ஆசாமிக்கு வலை

கும்பகோணம், டிச.16:    கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை பகுதியில் நேற்று முன் தினம்  இரவு தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் கும்பகோணத்தை நோக்கி புல்லட்டில் வந்தவரை மறித்து சோதனை செய்தனர். அப்போது புல்லட்டில் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து புல்லட்டில் வந்தவர் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கும்பகோணம் பேட்டை தெருவை சேர்ந்த செல்வின் (எ) செல்வகுமார் என்பதும், கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக புல்லட்டில் கஞ்சாவை பதுக்கி எடுத்து வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து தாலுகா போலீசார் தப்பியோடிய செல்வகுமாரை தேடி வருகின்றனர். மேலும் செல்வகுமார் மேல், அனைத்து காவல் நிலையங்களிலும்  பலவேறு கொலை, கொள்ளை மற்றும் சாராயம், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: