வீட்டு மாடியில் விஷ வண்டு அழிப்பு

திருவையாறு, டிச.16: திருவையாறு ராம் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் வீட்டின் மாடியில் விஷ வண்டு சுமார் 1 அடி நீளத்திலும், 2 அடி அகலத்திலும் கூடு கட்டியிருந்தது. மேலும் அவ்வழியாக செல்லும்  பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதை கண்ட பன்னீர்செல்வம் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் (பொ) செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டை பூச்சி மருந்து தெளித்து அழித்தனர்.

Related Stories: