×

கோவிலூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு சோலார் விளக்கு வழங்கல்

முத்துப்பேட்டை, டிச.16: முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புக்கு பிறகு மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டாலும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களின் கல்வி முடங்கியது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு படிப்பு பாதித்தது. இந்தநிலையில் முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள்  மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சோலார் விளக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். இதில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் சார்பில் ஆசிரியர் செல்வசிதம்பரம் மாணவிகளுக்கு சோலார் விளக்குகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கலாம் கனவு இயக்க திட்ட இயக்குநர் பாயிஸ்  உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags : government school students ,Kovilur ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்