×

திருவாரூர் அருகே வீட்டில் பதுக்கி மது விற்பனை படுஜோர் பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவர் கைது

திருவாரூர், டிச.16: திருவாரூர் அருகே குடவாசலில் புதுவை மாநில மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அத்திக்கடை ஆற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் வாசுகி (35). அதிமுகவில் இருந்து வந்த இவர் குடவாசல் பேரூராட்சி தலைவியாக கடந்த முறை பதவி வகித்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து தினகரன் அணி பிரியவே  அவரது அணியில் தற்போது வாசுகியும், கணவர் காமராஜும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் காமராஜ் புதுவை மாநில மது பாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குடவாசல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று காலை காமராஜ் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது புதுவை மாநிலத்தை  சேர்ந்த 44 குவாட்டர் பாட்டில்கள் மற்றும் 90 எம்.எல்  அளவுகொண்ட பாட்டில்கள் 24 என மொத்தம் 68 பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார் காமராஜையும்  கைது செய்து திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

கள்ளச்சாராயமும் அமோகம்குடவாசலில் நன்னிலம் மற்றும் வலங்கைமான் செல்லும் சாலைகள் என 2 இடங்களில்  டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் இந்த 2 கடைகளிலும் போலி மதுபாட்டில்கள் விற்பதாக வந்த புகாரை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு கடைகளுக்கும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பல மாதங்கள் கடந்த பின்னரும் இந்த 2 கடைகளையும் திறப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் குடவாசல் மற்றும் அத்திக்கடை பகுதியில் இதுபோன்று வீடுகள் மற்றும் சுடுகாடு இருக்கும் இடங்கள்  உட்பட பல்வேறு இடங்களில்  கள்ளச்சாராயம் மற்றும் புதுவை மாநில மதுபாட்டில்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

Tags : head ,town ,Puducherry ,Kotugam ,Thiruvarur ,house ,
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...