ஆற்றுமணலை மூட்டைகளாக கட்டி கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓட்டம்

பாகூர், டிச. 16: பாகூர் அருகே ஆற்றுமணலை மூட்டைகளாக கட்டி கடத்த முயன்ற கும்பல் தப்பி ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்

படுத்தி உள்ளது. பாகூர் அடுத்துள்ள கொம்மந்தான்மேடு தென்பெண்ணை ஆற்றில் சிலர் மணல் திருடிக்கொண்டிருப்பதாக பாகூர் காவல் நிலையத்திற்கு நேற்று அதிகாலை தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வீரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கொம்மந்தான்மேடு சுடுகாட்டில் சிலர் மணல் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த 113 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.இதுகுறித்து விசாரித்தபோது கொம்மந்தான்மேடு வீரன் கோயில் தெருவை சேர்ந்த அப்பு என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: