வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி, டிச. 16:  புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து நேற்று வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில் குறிப்பிட்ட தனியார் நிறுவனமானது மாதம் ரூ.18 ஆயிரத்துக்கும் அதிகமான ஊதியத்திற்கு 50க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கும் நேர்முகத்தேர்வு நடத்தியது. காலை 9 மணி முதல் மாலை வரை நடந்த இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 20 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். அவர்களுக்கு தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மேரி ஜோசப்பின் சித்ரா தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: