சேதுபாவாசத்திரம்,டிச.12: சேதுபாவாசத்திரம் அருகே தமமுக கொடி மற்றும் கொடிகம்பத்தை சேதப்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்.சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள ஊமத்தநாடு ஊராட்சி ஆலடிக்காட்டில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களுக்குள் உள்கட்சி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆலடிக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த கொடிகம்பத்தை சேதப்படுத்தி கொடியை தீ வைத்து கொளுத்தியதாக சேதுபாவாசத்திரம் போலீசில் ஆலடிக்காட்டை சேர்ந்த திருஞானம் (52) புகார் செய்தார்.அதன்பேரில் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து, பாரதி, சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பாரதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான மாரிமுத்து, சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.