ஒருவர் கைது விதிமுறைகளை மீறி பாபநாசம் பகுதியில் விளம்பர பேனர்கள்

பாபநாசம், டிச. 12: விதிமுறைகளை மீறி பாபநாசம் பகுதியில் விளம்பர ேபனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் டிஎஸ்பியிடம் வணிகர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் பாபநாசம் நகரில் உள்ள சாலைகள் மிகவும் குறுகலானது. மேலும் அதிக வளைவுகள் ெகாண்டது. பாபநாசத்தில் உள்ள கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. நெரிசல் மிகுந்த இந்த சாலையில் வியாபார கடைகளை மறைத்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், வாகனங்கள் விபத்தில் சிக்கும் வகையிலும் சாலையோரம் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியினர், பல்ேவறு அமைப்பினர் விளம்பர பேனர்களை வைத்துள்ளனர். மேலும் மின் கம்பங்களை ஒட்டி, கம்பிகளை உரசுமாறு பேனர் வைத்துள்ளனர். இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விதிமுறை மீறி விளம்பர பேனர்களை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: