தஞ்சை, டிச. 12: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 நிர்ணயம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும். கட்டுமானம் உடலுழைப்பு விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவர வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புயலால் பாதித்த பகுதிகளை மத்திய மாநில அரசுகள் புறக்கணிக்க கூடாது. மத்திய, மாநில தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து வரும் ஜனவரி 8, 9ம் தேதிகளில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடக்கிறது.