திருவிடைமருதூர், டிச. 12: திருவிடைமருதூர் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் வானாபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (58). பெயிண்டர் இவர் நேற்று முன்தினம் இரவு திருவிடைமருதூரில் இருந்து பெயிண்ட் வாங்கி கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மயிலாடுதுறை சென்ற லாரி மாரிமுத்து மீது மோதியது. இதில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருவிைடமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெண் தற்கொலை: திருவையாறு பள்ளிசந்தை சேர்ந்த நாகராஜன் மகள் தனலட்சுமி (20). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயிற்றுவலி அதிகமானதால் கடந்த 4ம் தேதி பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.