லாரி மோதி பெயிண்டர் பலி

திருவிடைமருதூர், டிச. 12: திருவிடைமருதூர் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவிந்தபுரம் வானாபுரத்தை சேர்ந்தவர்  மாரிமுத்து (58). பெயிண்டர் இவர் நேற்று முன்தினம் இரவு திருவிடைமருதூரில் இருந்து பெயிண்ட் வாங்கி கொண்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது  அந்த வழியாக மயிலாடுதுறை சென்ற லாரி  மாரிமுத்து மீது மோதியது. இதில்  மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திருவிைடமருதூர்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெண் தற்கொலை: திருவையாறு பள்ளிசந்தை சேர்ந்த நாகராஜன் மகள் தனலட்சுமி (20). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயிற்றுவலி அதிகமானதால் கடந்த 4ம் தேதி பூச்சிமருந்தை குடித்து மயங்கினார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

காயமடைந்த பெண் சாவு: பாபநாசம் அடுத்த பார்வதிபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்தாஸ் (55). இவரது தங்கை எலிசபெத் ராணி (51). இவரது கணவர் ஜோசப் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் அண்ணன், தங்கை இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி நடந்த சொத்து பிரச்னையால் எலிசபெத் ராணியை மைக்கேல் தாஸ், இவரது மனைவி ஜெயமேரி, மகன் பவுல்ராஜ், மகள்கள் ஜாய்ஸ்மேரி, கில்டாமேரி ஆகியோர் தாக்கினர்.இதில் படுகாயமடைந்த எலிசபெத் ராணியை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: