அய்யம்பேட்டையில் குறைதீர் கூட்டம்

பாபநாசம், டிச. 12: அய்யம்பேட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 44 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரத்தில் தமிழக அரசின் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு தொடர்பான 44 மனுக்களை அதிகாரிகள் பெற்றனர்.

Related Stories: