கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் திருவையாறில்

திருவையாறு,டிச.12: திருவையாறு தாலுகா அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 2வது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.அப்போது திருவையாறு தாலுகா அலுவலகம் முன் பொதுமக்களிடம் கோரிக்கை தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.வட்ட தலைவர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள், அவரவர் மாவட்டத்தில் பணிபுரிய மாறுதல் வழங்க வேண்டும். விஏஓ அலுவலகத்தில்  மின், கழிப்பறை, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். விஏஓ காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Related Stories: