தரங்கம்பாடி,டிச.12: நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த வலைகளை சீரமைக்கும் பணியில் ஓய்வு நேரங்களில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் அடித்த கஜா புயலாலும் மழையாலும் மீனவர்களின் வலைகள் பெரிதும் சேதமடைந்தன. அதனால் மீனவர்கள் மீன்பிடி தொழில் பெரிதும் பாதித்தது. இந்நிலையில் சீர்செய்யும் அளவில் சேதமடைந்த வலைகளை சீரமைக்கும் பணியில் தரங்கம்பாடி பகுதியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.