×

கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.12: இரண்டு மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வரும் இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் முறையாக வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள இரண்டு மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.திருத்துறைப்பூண்டி மேட்டு தெருவிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கமாவட்ட துணை செயலாளர் முருகையன், மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்சங்க கிளை தலைவர் நாத்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்