×

திருச்சி எஸ்பி அதிரடி ரயில்வே வேலையில் 4 சதவீத இட ஒதுக்கீடு கோரி திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.12:  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருச்சி மாவட்ட கிளை சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே வேலையில் மாற்றுதிறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து ரயில்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கு தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும். ரயில் நிலையங்களில் உள்ள பேட்டரி கார்களில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவசம் என அறிவிப்பு வெளியிட வேண்டும்.

மாற்றுதிறனாளிகள் பெட்டிகளை போலீசாரும், ரயில்வே ஊழியர்களும் ஆக்கிரமிப்பதை கைவிட வேண்டும். ரயில் நிலையங்களில் மாற்றுதிறனாளி கமிட்டி அமைக்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், திருச்சி தலைவர் குமார், செயலாளர்கள் கோபிநாத், பொருளாளர் சுப்பிரமணி, மாவட்ட தலைவர் ஜெயபால் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Trichy SSP ,conversion ,
× RELATED கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டம்