×

திருச்சியில் அரசு பொருட்காட்சி நாளை துவக்கம்

திருச்சி, டிச.12:  பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி திருச்சியில் நாளை துவங்குகிறது. தமிழக அரசின் சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப் பொருட்காட்சி திருச்சி பட்டாபிராமன் சாலை அருகில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் டிச.13ம் தேதி (நாளை) துவங்கி ஜனவரி 26ம் தேதி வரை 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.இதனை செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர், கலெக்டர் ராஜாமணி எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் கொள்கைக் குறிப்புகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணமாகவும், பயனடையும் விதமாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.   சிறு கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், கலை நிகழ்ச்சிகள்  இடம் பெற்றுள்ளன.

Tags : Government Exhibition ,Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்