×

பல லட்சம் பொருட்கள் நாசம் தா.பேட்டை அருகே மணக்கோலத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

தா.பேட்டை, டிச. 12: தா.பேட்டை அடுத்துள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் திருமண கோலத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையத்தை சேர்ந்தவர் கமல்பிரகாஷ்(29). பத்தாம் வகுப்பு படித்து விட்டு மாடுகளில் பால் கறந்து விற்கும் வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் மகள் அபிநயா (19). நர்சிங் படித்து விட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக ேவலை பார்த்து வருகிறார்.இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிநயாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதையடுத்து கமல்பிரகாசும், அபிநயாவும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி சிவன் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு தா.பேட்டை அருகே உள்ள ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் மணக்கோலத்தில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து  அங்கு வந்த கமல்பிரகாசின் பெற்றோர் மணமக்களை பாதுகாப்பாக பார்த்து கொள்வதாக போலீசாரிடம் வாக்குறுதி அளித்து அழைத்து சென்றனர். திருமண கோலத்தில் புதுமண ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : paddy ,fence ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...