×

ஆயில் கடையில் திடீர் தீ

லால்குடி, டிச.12:   லால்குடியை அடுத்த பூவாளூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (35). இவர் லால்குடி-திருச்சி சாலையில் கார் அலாய்மென்ட் நிறு வனம் மற்றும் கார் இரு சக்கர உதிரி பாகங்கள் மோட்டார் இன்ஜின் ஆயில் மற்றும் டயர்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் இரவு 10 மணிக்கு மேல்தான் கடையை மூடிவிட்டு செல்வது வழக்கம். ஆனால் நேற்று 8 மணிக்கெல்லாம் கடையை மூடிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 9 மணி அளவில் கடையிலிருந்து திடீரென புகை வந்துள்ளதை கண்ட பக்கத்து கடை பணியாளர்கள் லால்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் மளமளவென எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதனால் கடையில் இருந்த எந்த பொருட்களும் எடுக்க முடியாததால் கார் உதிரி பாகங்கள் மற்றும் டிரம்முடன் கூடிய ஆயில் அலெய்மெண்ட் பார்க்கும் இயந்திரம் உள்பட பல லட்சம் பொருட்கள் எரிந்து கருகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  வந்த லால்குடி போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.


Tags : fire ,oil shop ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா