பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு திருச்சி நகர் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

திருச்சி, டிச.12:  திருச்சி நகர் பகுதியில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.திருச்சி தென்னூர் துணை மின் நிலையத்தில் இன்று (12ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே, இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்னர்ஸ் ரோடு, பாரதிதாசன் சாலை, லாசன்ரோடு, ரொனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மென்ட் பகுதிகள், வாலாஜா பஜார், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன்நகர், அரசு காலனி, பீமநகர், ஹீபர்ரோடு, புத்தூர், பாரதிநகர், அரசு பொது மருத்துவமனை, பாலக்கரை, பருப்புக்காரத்தெரு, ஜமாலுதீன் மக்கான், உடையான் தோட்டம், அருணாச்சலம் காலனி, பீச்சாங்குளம், வேர்ஹவுஸ், புதுத்தெரு, கூனிபஜார், கண்டித்தெரு, மார்சிங்பேட்டை, புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, பிஷப்ஹீபர் கல்லூரி பகுதி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் தெரிவித்துள்ளார்.

Related Stories: