மண்ணூர் மலைகிராம பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா

ஆத்தூர், டிச.12: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணூர் மலைகிராமத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு,  அவரது உருவ படத்திற்கு, உதவி தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமையில் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜோசப், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் தொண்டு ஆகியவற்றை குறித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பாரதியார் பெருமைகள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் மலைகிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி:  கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப்பள்ளியில், பாரதியார் பிறந்தநாள் விழா பள்ளி மேலாண்மைக் குழுவின் மீனாம்பிகா தலைமையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்வம், பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து, மாணவர்களிடம் பேசினார். 

Related Stories: