சேலம், டிச.12: மாநிலம் முழுவதும் பெண்களை பாதுகாக்க வேண்டிய மகளிர் காவல்நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்து, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலீசாரை கண்டித்து சேலம் தலைமை தபால்நிலையம் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தினரும், தமிழ்நாடு வீட்டு பணிப்பெண்கள் சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுமதியம்மாள், பொருளாளர் கலைவாணி முன்னிலை வகித்தனர்.