திருச்சி, டிச.12: சம்பளம் வழங்காததை கண்டித்து திருச்சியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் பிஎஸ்என்எல் அலுவலகங்களில், துப்புரவு பணி, ஹவுஸ் கீப்பிங், டேபிள் என பல்வேறு பணிகளில் 5,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேரமாக இருந்த பணி நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து, மாதம் ரூ.7,000 சம்பளம் என நிர்ணயித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், பணி நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக மாற்றி, சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும்.