வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொந்தகை கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

மதுரை, டிச. 12: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 18ம் தேதி கொந்தகை பெருமாள் கோயில் சொர்க்க வாசல் அதிகாலையில் திறக்கப்பட உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில், உபகோயிலான கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயிலில், வரும் 18ம் தேதி (செவ்வாய் கிழமை) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அன்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்படும். பின் காலை 9 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் திருவீதிகளில் எழுந்தருள்வார். இந்த திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும். இரவு 9 மணி வரை நடை திந்திருக்கும் என மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: