×

டூவீலர் நிறுத்தியதில் தகராறு 2 வக்கீல்கள் உட்பட 3 பேருக்கு கத்திகுத்து

உசிலம்பட்டி, டிச. 12: உசிலம்பட்டி அருகே பி.கன்னியம்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் (எ) வீரபிரபாகரன் (54), வி.கள்ளபட்டியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (35). இருவரும் வக்கீல்கள். இவர்கள் உசிலம்பட்டி கவுண்டன்பட்டி சாலையில் அலுவலகம் வைத்துள்ளனர். இவர்கள் அலுவலகம் வைத்திருக்கும் அதே காம்ப்பவுண்ட்டின் மாடியில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (35) குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இப்பகுதியில் எலக்டீரிசியன் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வேலை முடித்து விட்டு ரமேஷ் வக்கீல் அலுவலகம் முன்பு டூவீலரை நிறுத்திவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் காசிமாயன் (எ) வீரபிரபாகரன், ஜெயகிருஷ்ணன், காசிமாயன் நண்பர் உசிலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (45) ஆகிய மூன்றுபேரும் ரமேஷ்சிடம் டூவீலரை ஏன் நிறுத்தினாய் என கேட்டுள்ளனர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் காசிமாயனை வயிற்றிலும், பிரகாஷை கையிலும், ஜெயகிருஷ்ணனை வயிற்றிலும் ரமேஷ் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.புகாரின்பேரில் உசிலம்பட்டி நகர போலீசார் ரமேஷை கைது செய்தனர். காயம்பட்ட 3 பேரும், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : advocates ,dispute ,
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...