×

தலையில் கல் விழுந்து கூலித் தொழிலாளி பலி

பேரையூர், டிச. 12: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே வி.சத்திரபட்டி அருகே கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் வி.அம்மாபட்டியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் அய்யாச்சாமி (40) நேற்று கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தலையில் கல் விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த அய்யாச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...