×

இன்ஜினியர் வீட்டில் 36 பவுன் நகை திருட்டு

மதுரை, டிச. 12: மதுரையில் பொறியாளர் வீட்டிலிருந்த 36 பவுன் நகைகள் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அண்ணா நகர் பாரதியார்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜா (47). இவர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலவலகத்தில் உதவி பொறியாளராக உள்ளார். இவரது வீட்டில் காளையார்கோவில் அருகே உள்ள ஊத்திக்குளம் சன்டிபட்டியை சேர்ந்த புஷ்பா, வீட்டு வேலைகளை செய்து வந்தார். இவர் கடந்த ஜூலை 18ம் தேதி வேலையை விட்டு நின்று விட்டார். ஒரு விசேஷத்துக்கு அணிந்து செல்வதற்காக வீட்டிலிருந்த நகைகளை குடும்பத்தினர் எடுக்க சென்றனர். பீரோவில் இருந்த 36 பவுன் நகைகளை காணவில்லை. புஷ்பா நகைகளை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Engineer ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...