×

ரேஷன் பொருட்கள் வாங்க முடியல 3 கி.மீ. நடையாய் நடக்கும் பொதுமக்கள்

திருமங்கலம், டிச. 12: திருமங்கலம் அருகேயுள்ள காமாட்சிபுரம் கிராம மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க நான்கு வழிச்சாலையை கடந்து 3 கி.மீ. தூரமுள்ள சமத்துவபுரத்திற்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமங்கலம் ஒன்றியத்திற்கு உபட்டது காமாட்சிபுரம். இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு இயங்கிவந்த ரேஷன்கடை சேதமடைந்துவிட்டதால் கடையை சமத்துவபுரத்திற்கு மாற்றிவிட்டனர். 3 கி.மீ. தூரமுள்ள சமத்துவபுரத்திற்கு நான்கு வழிச்சாலையை கடந்து காமாட்சிபுரம் மக்கள் செல்ல வேண்டியுள்ளது. எந்தநாளில் என்ன பொருட்கள் சப்ளையாகிறது என்ற விவரங்கள் அறிய முடியவில்லை. பல நாள்களில் நான்கு வழிச்சாலையை கடக்க முயலும்போது விபத்துகளில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக காமாட்சிபுரத்தில் புதிய ரேஷன்கடையை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Civilians ,
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...