ஒட்டன்சத்திரம், டிச. 12: வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.1க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, விருப்பாட்சி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூசணிக்காய் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக பூசணி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கனி மார்க்கெட்டில் பூசணி வரத்து அதிகரித்து விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.