காங்கிரஸ் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்

திண்டுக்கல், டிச. 12:  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக திண்டுக்கல்லில் மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் பஸ்நிலையத்தில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் துணைத்தலைவர் ஷாஜகான், பொதுச் செயலாளர் ராஜா, சட்டமன்ற துணைத்தலைவர் பிரபு, பொதுச்செயலாளர்கள் முகமது, வினோத்குமார், செயலாளர் சரவணன், மண்டலத்தலைவர் சாமுவேல், துணைத்தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் காங்கிரசார் வெடி வெடித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Related Stories: