கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் ‘கப்’ சுற்றுலா பயணிகள் முகம்சுளிப்பு

கொடைக்கானல், டிச. 12:  கொடைக்கானல் கலையரங்கம் பகுதி கால்வாயில் அடிக்கடி கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொடைக்கானல் ஏரியின் அருகேயுள்ளது கலையரங்கம். இப்பகுதியில் தனியார் ஓட்டல்கள், தங்கும்விடுதிகள் ஏராளமாக உள்ளன. இதனால் இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் அதிகளவு இருக்கும். இங்குள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அடிக்கடி கழிவுநீர் சாலையில் வழிந்தோடி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியை கடந்த செல்லும் சுற்றுலா பயணிகள் முகம்சுளித்தவாறு செல்கின்றனர். மேலும் சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் தடையின்றி வழிந்தோட கால்வாயை சரிசெய்ய வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: