குளத்தில் மூழ்கி மாணவன் பலி

திண்டுக்கல், டிச. 12: திண்டுக்கல் குடைபாறைபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் தினேஷ்குமார் (13). திண்டுக்கல் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்த வந்தார். இன்று முதல் அரையாண்டு தேர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதால் நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தினேஷ்குமார் அங்குள்ள முத்துசாமி குளத்தில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிகிறது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தினேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: