கஜா புயலால் பாதித்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம்

ஒட்டன்சத்திரம், டிச. 12:  ஒட்டன்சத்திரத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம், மக்காச்சோளம், கண்வலிசெடி, தென்னை, வாழை, முருங்கை போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இன்னும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை வழங்காததை வன்மையாக கண்டிக்கிறோம். புயலால் பாதித்த (ஏக்கர் அளவில்) குகண்வலி செடி ரூ.50 ஆயிரம், மக்காச்சோளத்திற்கு ரூ.30 ஆயிரம், வெங்காயத்திற்கு ரூ.20 ஆயிரம், தென்னை மரத்திற்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக கணக்கிட்டு நிவாரணம் வழங்காவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்’’ என்றார். உடன் நகர செயலாளர் குப்புச்சாமி இருந்தார்.

Related Stories: